ஞானசார தேரரின் மேன் முறையீட்டு மனு நிராகரிப்பு


பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் மேன் முறையீட்டு மனு இன்றையதினம் உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், ஞானசார தேரருக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கியிருந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக, தாக்கல் செய்திருந்த மேன் முறையீட்டு மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக தெரிவித் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments