கைதிகள் விவகாரம்:நாளை அவசர கூட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடாத்திவரும் அரசியல் கைதிகளை காப்பாற்றுவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்குமான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் நாளை காலை 11 மணிக்கு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இது குறித்து இன்றைய தினம் அரசியல் கைதிக ளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்திரு எம்.சக்திவேல் மற்றும் பொது அமைப்புக்கள் சேர்த்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடல் நடாத்தியிருந்தனர். இந்த கலந்துரையாடலின் அடிப்படையிலேயே தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

இது குறித்து முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தமிழ் அரசியல் கைதிகள் தங்களுடைய விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நடாத்திவருகின்றனர். அவர்களுடைய உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது. எனவே அவர்களுடைய விடுதலை தொடர்பாகவும், அவர்களுடைய உயிர் பாதுகாப்பு தொடர்பாகவும் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது. இதனடிப்படையில் இன்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்திரு எம்.சக்திவேல் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என்னை சந்தித்து பேசியிருக்கின்றார்கள். அதனடிப்படையில் நாளை காலை 11ம ணிக்கு கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

No comments