கிணற்றிலிருந்து மீக்கப்பட்டது 3 மாத யாணைக் குட்டி!

கிணற்றிலிருந்து யாணைக்குட்டி ஒன்று வவுனியாவில் மீட்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாமடுவ நாமல்கல பகுதியில் அமைந்துள்ள காட்டுப்புறத்தில் அமைந்துள்ள பாழடைந்த கிணற்றிலிருந்தே குறித்த யாணைக்குட்டி மீட்கப்பட்டுள்ளது.

கிணற்றில் வீழ்ந்த யாணைக்குட்டி அவதானித்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும், காவல்துறையினருக்கும் தகவல் வழங்கியதை அடுத்து யாணைக்குட்டியை வனஜீவராசிப் அதிகாரிகளும் காவல்துறையினரும் மீட்டுள்ளனர். 3 மாதக் யாணைக் குட்டியே மீட்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





No comments