சீனாவின் கொள்கையில் ராஜபக்சே!

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.


இலங்கையில் தலைமையமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தில்லிக்கு வந்து இந்திய அரசுடன் பேச்சு நடத்திவிட்டுத் திரும்பியவுடன் அவரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு தலைமையமைச்சராக இராஜபக்சேயை இலங்கை குடியரசுத் தலைவர் சிறீ சேனா நியமித்து அவரும் பதவியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்

சிங்களத் தலைவர்களுக்குள் எவ்வளவு பகைமை இருந்தாலும் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதில் ஒன்றுசேர்ந்துகொள்வார்கள் என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இராசபக்சே மீண்டும் அதிகாரத்திற்கு வந்திருப்பது ஈழத் தமிழர்களுக்கு எதிரானது என்பது மட்டுமல்ல, இந்திய அரசுக்கும் எதிரானதுமாகும். இலங்கை பிரச்சனையில் சீனா மீண்டும் வெற்றி பெற்றுவிட்டது. இந்தியாவின் அணுகுமுறை தோல்வியை சந்தித்துள்ளது.

அன்புள்ள

பழ.நெடுமாறன்

No comments