அரசியல் கைதிகளை பலியாக்காதே! யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் யாழ் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இக்கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கொட்டும் மழையிலும் நடைபெற்ற இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பொதுமக்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் எனப் பலரும் கலந்துகொண்டு அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அநுராதபுர சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் உண்ணாவிரப் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு தங்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் எனற கோரிக்கையை முன்வைத்து கடந்த 15 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

No comments