வீட்டுக்குள் போகின்றார் எதிர்கட்சி தவராசா?


வடமாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா அரசியலில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளார்.வடமாகாணசபை கலைக்கப்பட்ட பின்னராக தேர்தல் அரசியலுக்கு முழுக்குப்போடவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்களிடம் பகிர்ந்துள்ளார்.

மீண்டும் ஈபிடிபி கட்சியில் இணையவுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளை நிராகரித்துள்ள அவர் மக்கள் நலன்களை பெற்றுக்கொடுக்கும் மக்களியக்கம் ஒன்றினை கட்டமைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். 
இதனிடையே தனக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை தக்கவைக்க உதவிய அவைத்தலைவரிற்கு நன்றிக்கடன் தீர்க்க அவர் முற்படுவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பளை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் காற்றாலை விடயத்தில் வடமாகாண அமைச்சர் சபை தவறிழைத்துள்ளதாக மீண்டும் சி.தவராசா கூறியுள்ளார். பளைக்காற்றாலை விடயத்தில் முதலமைச்சர் கூறுவது போன்று அத் தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே முதலீட்டுச் சபையின் அனுமதியினைப் பெற்றிருந்தவர்கள் என்பது உண்மைதான். ஆனால் அதற்கு மேலதிகமாக மாகாண சபையின் அனுமதியும் பெறவேண்டி இருந்தது. 

அந்த  அனுமதி  என்ன என்பதனை ஐங்கரநேசன் அவர்கள் 19.12.2014 அன்று சபையில்ஆற்றிய உரையிலிருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது. அவ் உரையில் அவர் கூறியிருப்பதாவது, “இந்த ஒப்பந்தத்தினுடைய பிரகாரம் இருபது வருடங்களிற்கு எங்களுடைய கௌரவ முதலமைச்சர் அந்தக் காணிக்கான அனுமதியினை வழங்கியிருந்தார்.”முதலமைச்சர் கூறுவது போல் இது தொடர்பாக ஏற்கனவே  அனுமதிகள் யாவும் பெற்றிருக்கிறார்களாயின் காணி அனுமதியினை எதற்காக முதலமைச்சர் அவர்கள் வழங்க வேண்டும்? தாங்கள் கோரும் நிதியை சமூகப் பயன்பாட்டிற்குத் தருவதற்கு முதலீட்டாளர்கள் மறுத்திருப்பார்களே ஆயின் காணி அனுமதியினை வழங்காமல் இருந்திருக்கலாம். 

இது 2014ஆம் ஆண்டு பேசப்பட்ட விடயமாக இருந்தாலும் தற்போது ஓர் புதிய தகவல் கிடைத்துள்ளது என்பதனைமுதலமைச்சர் புரியவில்லையா அல்லது புரியாதது போன்று பாசாங்கு செய்கிறாரா? 

2016ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கை தற்போதுதான் எமக்குக் கிடைத்துள்ளது. இக் கணக்காய்வு அறிக்கையில் இவ்விடயம் தொடர்பாக இது வரை அறிந்திராத ஓர் விடயம் தரப்பட்டுள்ளது. அதாவது 2014 டிசெம்பரிலிருந்து 2016 டிசெம்பர் வரையான காலப்பகுதிக்குள் அந் நிறுவனம் ரூ.2,933.8 மில்லியனை வருமானமாகப் பெற்றுள்ளது. அதுவும் உற்பத்திச் செலவுகள் இல்லாத வருமானம். இதில் மாகாணத்தின் சமூகப் பயன்பாட்டிற்காக வருடமொன்றிற்குக் கிடைக்கும் நிதி nவுறுமனே ரூபா. 20 மில்லியன். முதலமைச்சர் கடந்த ஐந்து வருட மாhகண சபைச் செயற்பாடுகள் தொடர்பாக தாம் உண்மையாகவும், நேர்மையாகவும் சொல்லுகின்றார் என்றால், கேள்வி – பதில் என்ற கோதாவில் அறிக்கைகள் விடுவதைத் தவிர்த்து, ஓர் நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு அவரின் கூற்றுக்களை நிரூபித்துக் காட்டட்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

#TNA #Thavarajah #EPDP

No comments