ஒரு கோடி கேட்கின்றார் சுகிர்தன்?

வலிகாமம் வடக்கு பிரதேசசபை பிரிவினில் மதுபானச்சாலை ஒன்றை அமைப்பதற்கு வலி.வடக்கு பிரதேச சபை தலைவரும்,தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவின் செயலாளருமான சோ.சுகிர்தன் ஒரு கோடி இலஞ்சம் கோரியமை உள்ளுராட்சி சபை பிரமுகர்களிடையே பேசுபொருளாகியிருக்கின்றது.
மதுபானச்சாலை அமைப்பதற்கான இடம் தொடர்பிலான அனுமதியை உள்ளுராட்சி சபையே வழங்கவேண்டும்.இந்நிலையில் குறித்த அனுமதியை வழங்குவதானால் தனக்கு ஒரு கோடி வழங்குமாறு சோ.சுகிர்தன் கோரியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

ஏற்கனவே சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரத்தில் நொதேர்ண் பவர் நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றவர்களது பெயர்பட்டியலில் சோ.சுகிர்தனின் பெயரும் உள்ளடங்கியிருந்தது.

இந்நிலையில் தற்போது மதுபானச்சாலைக்கு இடமொதுக்கி வழங்க ஒரு கோடி கோரியவிவகாரம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

எனினும் ஒரு கோடி கொடுத்து மதுபானச்சாலை அமைக்கும் தேவை தனக்கில்லையென தெரிவித்து குறித்த வர்த்தகர் முயற்சியை கைவிட்டு சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் சோ.சுகிர்தனும் களமிறங்கவுள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#TNA  #Sukirthan  #Valikamam #Vali North

No comments