வேட்பாளராக விக்னேஸ்வரன் நிற்க முடியாது! முக்கிய பாத்திரம் ஏற்றால் இணந்து செயற்படத் தயார் - சுமந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தலைமைப் பொறுப்பிலிருந்து
தவறிவிட்டது என்று கூறுபவர் மீண்டும் கூட்டமைப்பின் வேட்பாளராக
நிற்க முடியாது. அது சாத்தியமற்றது. எனவே சி.வி.விக்னேஸ்வரன்
விரும்பு கின்ற தனது நாலாவது தெரிவின்படி கட்சி அரசியலை
விட்டு விலகி, இங்குள்ள அரசியல் கட்சிகளையும், வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களையும் இணைந்து தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெறும் முயற்சியின் ஒட்டுமொத்த தலைமைப் பாகத்தை வகிக்கும் மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்க வருவாரானால் அவரது தலைமைக்குக் கீழ் மிகவும் சந்தோசமாகச் செயற்பட நாங்கள் தயாராகவே உள்ளோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்தாவது,
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் நாங்கள் சி.வி.விக்னேஸ்வரைன முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி அவருக்கு வாக்களியுங்கள் என்று கோரினோம். அதுமட்டுமல்லாது எமது கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் உங்கள் விருப்பு வாக்குகளில் முதலில் அவருக்கே வாக்களியுங்கள் என்று கூறி அவரை வெற்றியடையச் செய்தோம். ஆனால் எமக்குள் முரண்பாடு ஏற்பட அவருடைய சில செயற்பாடுகளே காரணம்.
தாம் அரசியலில் முதலமைச்சராகக் களமிறங்கியபோது வீட்டுச் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கூறினார். அதற்குப் பின்னர் நடந்த இரு தேர்தல்களிலும் அதற்கு மாறாகவே செயற்பட்டார். கூட்டமைப்பின் முதலமைச்சராக இருந்து கொண்டு அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூறினார். இதை நாம் மட்டுமல்ல எந்த ஒரு அரசியல் கட்சியும் ஏற்றுக்கொள்ளாது.
ஒரு கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் ஏற்பட்ட முரண்பாடுகளு இப்போதும் இருக்கின்றன.
இந்தப் பிரச்சினைக்கு முடிவு வர வேண்டுமானால் கூட்டமைப்பில் இருந்துகொண்டு கூட்டமைப்பை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். அவர் கட்சிக்குக் கட்டுப்படாதவராகவே உள்ளார்.
விக்னேஸ்வரனை நாம் ஒரு நோக்கத்துக்காகவே அரசியலுக்குக் கொண்டு வந்தோம். ஆரம்பத்தில் அவர் சரியான பாதையில் பயணித்தார். பின்னர் எவரோ ஒருவரின் செல்லைக் கேட்டு கூட்டமைப்புத் தவறான பாதையில் பயணிக்கின்றது என்று தானாகவே எண்ணி வேறு கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறுவது தவறான விடயம்.
தமிழ் மக்களின் ஒற்றுமை சிதைந்துவிடக் கூடாது. நாம் தேர்தலில் வேறு வேறு தரப்பாக மோதக் கூடாது என்றால் ஒரு தெரிவுதான் உள்ளது. அவர் கட்சி அரசியலில் இருந்து விலகி அனைவரையும் ஒன்றிணைத்து முக்கிய பாத்திரத்தை ஏற்க வந்தால் நாமும் இணங்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளார் சுமந்திரன்.
விட்டு விலகி, இங்குள்ள அரசியல் கட்சிகளையும், வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களையும் இணைந்து தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெறும் முயற்சியின் ஒட்டுமொத்த தலைமைப் பாகத்தை வகிக்கும் மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்க வருவாரானால் அவரது தலைமைக்குக் கீழ் மிகவும் சந்தோசமாகச் செயற்பட நாங்கள் தயாராகவே உள்ளோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்தாவது,
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் நாங்கள் சி.வி.விக்னேஸ்வரைன முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி அவருக்கு வாக்களியுங்கள் என்று கோரினோம். அதுமட்டுமல்லாது எமது கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் உங்கள் விருப்பு வாக்குகளில் முதலில் அவருக்கே வாக்களியுங்கள் என்று கூறி அவரை வெற்றியடையச் செய்தோம். ஆனால் எமக்குள் முரண்பாடு ஏற்பட அவருடைய சில செயற்பாடுகளே காரணம்.
தாம் அரசியலில் முதலமைச்சராகக் களமிறங்கியபோது வீட்டுச் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கூறினார். அதற்குப் பின்னர் நடந்த இரு தேர்தல்களிலும் அதற்கு மாறாகவே செயற்பட்டார். கூட்டமைப்பின் முதலமைச்சராக இருந்து கொண்டு அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூறினார். இதை நாம் மட்டுமல்ல எந்த ஒரு அரசியல் கட்சியும் ஏற்றுக்கொள்ளாது.
ஒரு கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் ஏற்பட்ட முரண்பாடுகளு இப்போதும் இருக்கின்றன.
இந்தப் பிரச்சினைக்கு முடிவு வர வேண்டுமானால் கூட்டமைப்பில் இருந்துகொண்டு கூட்டமைப்பை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். அவர் கட்சிக்குக் கட்டுப்படாதவராகவே உள்ளார்.
விக்னேஸ்வரனை நாம் ஒரு நோக்கத்துக்காகவே அரசியலுக்குக் கொண்டு வந்தோம். ஆரம்பத்தில் அவர் சரியான பாதையில் பயணித்தார். பின்னர் எவரோ ஒருவரின் செல்லைக் கேட்டு கூட்டமைப்புத் தவறான பாதையில் பயணிக்கின்றது என்று தானாகவே எண்ணி வேறு கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறுவது தவறான விடயம்.
தமிழ் மக்களின் ஒற்றுமை சிதைந்துவிடக் கூடாது. நாம் தேர்தலில் வேறு வேறு தரப்பாக மோதக் கூடாது என்றால் ஒரு தெரிவுதான் உள்ளது. அவர் கட்சி அரசியலில் இருந்து விலகி அனைவரையும் ஒன்றிணைத்து முக்கிய பாத்திரத்தை ஏற்க வந்தால் நாமும் இணங்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளார் சுமந்திரன்.
Post a Comment