உடுப்பிட்டியில் போலி ஜயாயிரம் ?
வடமராட்சியின் உடுப்பிட்டியில் மாலைவேளையில் குறிப்பிட்ட நேர இடைவெளியினுள் போலி ஜயாயிரம் ரூபாய் நோட்டுக்கள் பல வர்த்தக நிலையங்களில் மாற்றப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இளவயதினையுடைய நபர்கள் சிலர் இருள் கவியும் வேளையில் வர்த்தக நிலையங்களில் அடுத்தடுத்து பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு போலி ஜயாயிரம் ரூபாய் நோட்டுக்களை கொடுத்துவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.
அடுத்த தினம் வர்த்தகர்கள் பணத்தை வங்கியில் வைப்பிலிடச்சென்ற போதே தாம் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்துள்ளனர்.
ஒரே தடவையில் பல வர்த்தகநிலையங்களில் நடத்தப்பட்ட ஏமாற்று வேலை தொடர்பில் எவரும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை.
Post a Comment