அரசியல் கைதிகளிற்காக களமிறங்கிய அரச அமைச்சர்?



வன்னியை பொறுத்தவரைக்கும் ஆளும் தரப்புக்களுடன் இணைந்து போட்டியிடும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களிற்கு எதிராகவே செயற்படுவழமையாகும்.அதுவும் தமிழ்மக்களின் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றாலும் தமிழர்களின் அரசியல் உரிமை சார் போராட்டங்களில் கலந்து கொள்வதையோ அல்லது தமிழர்கள் உரிமைக்காக குரல்கொடுப்கதையோ தவிர்த்து வந்தனர். 

ஆனால் அன்மையில் புனர்வாழ்வு, மீழ்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவியேற்ற காதர் மஸ்தான் இன்று வவுனியாவில் இடம்பெற்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் சகிதம் பேரணியில் காதர் மஸ்தானும் பங்ககெடுத்திருந்தார்.

No comments