அரசியல் கைதிகளிற்காக யாழில் உண்ணாவிரதம்?


உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மாவட்ட செயலகம் முன்னதாக நடத்தப்பட்டுள்ளது.

பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து இந்தப் போராட்டத்துக்கான அழைப்பை விடுத்திருந்தன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புதிய மாக்சிஸ லெனிசக் கட்சி,சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, காணாமல்போனோர் பெற்றோர் பாதுகாவலர் சங்கம் ஆகியன இணைந்து கவனயீர்ப்பு போராட்ட்த்தை முன்னெடுத்திருந்தன.

அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 10 நாட்களாகத் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களில் நால்வரது நிலைமை மோசமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலை முதல் யாழ்.மாவட்ட செயலகம் முன்பதாக அவர்களது போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

No comments