பொலிஸ்மா அதிபருக்கு எதிராக விசாரணை !


ஜனாதிபதியோ, பிரதமரோ பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி விலகுமாறு பணிப்புரை வழங்கவில்லை என்று சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார கூறினார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் கனகஹேரத்தால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் பொலிஸ் மா அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதி அமைச்சர் நளின் பண்டார கூறினார்.

இதேவேளை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி விலகுமாறு பிரதமர் பணிப்புரை வழங்கவில்லை என்று அரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்குள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி விலகுமாறு பிரதமர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வௌியாகியுள்ள போதிலும், பிரதமர் அவ்வாறு பணிப்புரை வழங்கவில்லை என்று அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

No comments