கண்டிவெடியில் காயமடைந்த இரண்டாவது நபரும் இறந்தார்!
முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது மிதிவெடி வெடித்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞனும் நேற்று புதன்கிழமை உயிரிழந்தார்.
மாங்குளம் பாலைப் பணி என்ற இடத்தில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த திங்கள் கிழமை நடந்த வெடிவிபத்தில் கிளிநொச்சி, பரவிப்பாஞ்சானை சேர்ந்த பி.திலீபன் (வயது – 24) என்ற இளைஞர் உயிரிழந்தார்.
வவுனியாவைச் சேர்ந்த எஸ்.நிதர்சன் (வயது – 25) படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நிதர்சன் நேற்று உயிரிழந்தார். இதேவேளை, கணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதை வந்து பார்வையிட்ட கர்பிணியான அவரது மனைவி, கணவனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதால், தவறான முடிவு எடுத்து உயிர்துறக்க முற்பட்டுள்ளார் என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.
#Mines #Land Mines #Vavuniya #Mullaitivu
மாங்குளம் பாலைப் பணி என்ற இடத்தில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த திங்கள் கிழமை நடந்த வெடிவிபத்தில் கிளிநொச்சி, பரவிப்பாஞ்சானை சேர்ந்த பி.திலீபன் (வயது – 24) என்ற இளைஞர் உயிரிழந்தார்.
வவுனியாவைச் சேர்ந்த எஸ்.நிதர்சன் (வயது – 25) படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நிதர்சன் நேற்று உயிரிழந்தார். இதேவேளை, கணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதை வந்து பார்வையிட்ட கர்பிணியான அவரது மனைவி, கணவனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதால், தவறான முடிவு எடுத்து உயிர்துறக்க முற்பட்டுள்ளார் என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.
#Mines #Land Mines #Vavuniya #Mullaitivu
Post a Comment