நீரில் மூழ்கடிக்கப்பட்டு மரணம்?

திருகோணமலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் நீரில் முழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலாலேயே மரணம் சம்பவிப்பத்துள்ளதென  பிரேத பரிசோதனையின் ஊடாக தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனையானது யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மாலை இடம்பெற்றிருந்த நிலையில் தகவல் வெளியாகியுள்ளது.
திருகோணமலையில் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் கவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வவுனியா-ஆசிக்குளம் இலக்கம் 108 கட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நடராசா போதநாயகி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விடுதியில் தங்கியிருந்த நிலையில், நேற்று (20), விடுமுறை பெற்று வீட்டுக்கு செல்வதாக சக நண்பர்களிடம் கூறி விட்டு சென்றுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் காவலாளிகளும், இவர் முச்சக்கர வண்டியில் சென்றதை அவதானித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண் விரிவுரையாளரின் பை மற்றும் காலணி போன்ற பொருட்கள் செப்டம்பர் நேற்று காலை, திருகோணமலை சங்கமித்த கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டு பின் அடையாளம் காணப்பட்டார்.

திருமணமாகி ஒரு வருடம் கூட முடியாத நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.

No comments