ஒரு கோடியே 81 இலட்சம் பெறுமதியான கஞ்சா அழிப்பு



மன்னார் மேல் நீதிமன்றில் நிறைவடைந்த வழக்குகளின் 181 கிலோ கிராம் கஞ்சா சான்றுப் பொருள்கள் இன்று (28) வெள்ளிக்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டன.

போதைப் பொருள் கடத்தல் தொடர்பான 7 வழக்குகளின் சான்றுப் பொருள்களே இவ்வாறு அழிக்கப்பட்டன.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப் வழங்கிய உத்தரவில், நீதிமன்ற வளாகத்துக்கு அண்மையாகவுள்ள அரச காணியில் போட்டு அவை எரிக்கப்பட்டன.

இந்த சான்றுப் பொருள்களில் ஒரு கோடியே 81 இலட்சம் ரூபா பெறுமதியான 181 கிலோ 625 கிராம் எடைகொண்ட கஞ்சா போதைப்பொருள்களே இவ்வாறு தீயிட்டு அழப்பட்டன.

No comments