நாளையே பதவியேற்கத் தயார் என்கிறார் மகிந்த


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அனைவரும் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும். தன்னிடம் ஆட்சிப் பொறுப்பை நாளையே வழங்கினாலும், தான் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், மரணப் பயத்தை ஏற்படுத்தி தான் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதை எவராவது தடுக்க நினைப்பார்களாயின் அது தவறானது எனக் கூறிய அவர், தனது பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.

No comments