கஞ்சாவைத்திருந்த இருவர் காங்கேசன்துறையில் கைது


காங்கேசன்துறை கடற்பரப்பில் கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

காங்கேசன்துறை கடற்பகுதியில் செவ்வாய்க்கிழமை சுற்றுக்காவல்(ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகை மறித்து சோதனையிட்ட போது படகில் இருந்து 28 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து படகில் இருந்த வடமராட்சி கிழக்கை சேர்ந்த இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் , மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருளையும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் நேற்றிரவு கடற்படையினர் ஒப்படைத்தனர்.

No comments