இணுவிலில் இருவர் கைது - தகவல் வழங்க பொலிஸ் மறுப்பு


பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரின் தகவலின்  அடிப்படையில் சுன்னாகம் பொலிசாரினால் இணுவில் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டபோதும் பொலிசார் அதனை மறுத்துள்ளனர்.

ஆவா குழுவுடன் தொடர்புடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. எனினும் அவர்களது கைது தொடர்பில் தகவல் வழங்க பொலிசார் மறுப்புத் தெரிவித்துவிட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு நாள் ஒருவரையும் மறுநாள் மற்றொருவரையும் சுன்னாகத்தைச் சேர்ந்த பொலிசார் என நம்பப்படும் பொலிசாரினால் காரைக்கால் பகுதியில் வைத்து கைது செய்து விலங்கிட்டு அழைத்துச் சென்றதை தாங்கள் கண்ணுற்றதாக அங்கு தோட்டங்களில் வேலை செய்பவர்கள் உறுதிப்படுத்தினர்.

எனினும் சுன்னாகம் பொலிசாரோ கோப்பாய் பொலிசாரோ தாங்கள் எவரையும் கைது செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

No comments