வந்தாறுமூலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 28 ஆவது நினைவேந்தல் முன்னெடுப்பு

கிழக்குப் பல்.கலையிலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணமால் ஆக்கப்பட்டவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக  வளாக முன்றலில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

காணமால் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மொன இறைவணக்கம், மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினர்.

1990 ஆண்டு நடுப்பகுதியில் அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் ஊக்கிரமடைந்த நிலையில் உயிர் அபாயம் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழக முகாமில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். இதன்போது படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#Vantharumoolai #Missing Person #Tamil #Enforce Disaperance

No comments