திருமலை சீமெந்து தொழிற்சாலையில் இளைஞன் கோர மரணம்!

திருகோணமலை மிட்சுயி சீமெந்து தொழிற்சாலையில் இன்று (27) காலை 11மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 23 வயதுடைய இளைஞன் பலியாகியுள்ளார்.

பலியானவர் சீனக்குடா பகுதியில் ஜனசக்திபுரத்தைச் சேர்ந்த அன்டனி ஸ்டீபன் என்பரே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் மிட்சுயி சீமெந்து தொழிற்சாலையில் 04 ஆண்டுகள் கடமை புரிந்தள்ளார்.

சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த சக தொழிலாளர்கள் இவ்வாறு தெரிவிக்கையில்:

புதிதாக கொண்டு வரப்பட்ட கொப்பர் இயந்திரத்தில் கப்பலில் இருந்து வரும் சிலிக்கன் மண்ணை ஏற்றி வரும் போது அதிக பாரம் காரணமாக சரிந்த கொப்பருக்கு இடையில் சிக்கியதால் இளைஞன் பலியாகினார்.

சம்பவத்தில் பலியானவரின் சடலம் மாலை 3.30 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டள்ளது.

No comments