புத்தரைத் தேடி மைத்திரி பயணம்


கௌதம புத்தர் பிறந்த லும்பினிக்கு சிறிலங்கா ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தை சிறிலங்கா ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார் என்று நேபாள உள்துறை அமைச்சு  அதிகாரி ஒருவர் காத்மண்டு போஸ்ட் நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் எதிர்வரும் 30ஆம் நாள் ஆரம்பமாகும் பிம்ஸ்ரெக் மாநாட்டில் சிறிலங்கா ஜனாதிபதி மைத்தி்ரிபால சிறிசேன பங்கேற்வுள்ளார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்ற பின்னரே, சிறிலங்கா ஜனாதிபதி, லும்பினிக்கும் செல்லவுள்ளார்.

வங்காள விரிகுடா விளிம்பு நாடுகளின் இந்த உச்சி மாநாட்டில், பங்களாதேஷ், இந்தியா, மியான்மார், தாய்லாந்து, பூட்டான், நேபாளம் மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments