9 மாகாணசபைக்கும் ஒரே நாளில் தேர்தல் ?


உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடத்தப்பட்டதைப் போன்று கலப்பு முறையிலோ அல்லது பழைய முறையிலோ இந்த வருடம் டிசம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார். 9 மாகாணங்களுக்குமான தேர்தலையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஒரே நேரத்தில் நடத்துவது சிறந்ததென்றும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: எதிர்வரும் 24ஆம் திகதி மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கையானது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 3 மாகாண சபைகள் கலைக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. மேலும் 3 மாகாண சபைகள் செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் கலைக்கப்படவுள்ளன. அத்துடன் ஏனைய 3 மாகாண சபைகள் அடுத்த வருடம் கலைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments