11 மணித்தியாலத்தில் சிறிலங்காவில் 3 ஆயிரத்து 99 பேர் கைது



நாடு தழுவிய ரீதியில் வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணி தொடக்கம் நேற்று சனிக்கிழமை காலை எட்டு மணி வரையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட மூவாயிரத்து 99 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 இதற்கு மேலதிகமாக வழக்கு தொடரப்பட்டுள்ள நான்காயிரத்து 960 வாகன சாரதிகள் தொடர்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கையில் 13 ஆயிரத்து 780 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச்செயல்களை தடுக்கும் பணியில் வாகன விபத்தை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய இவ்வாறான நடவடிக்கை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments