மகாவலி நில அபகரிப்புக்கு எதிரான மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு



முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதியில் மகாவலி அபிவிருத்திச் சபை ஊடாக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து  பாரிய மக்கள் போராட்டம் நடைபெறவுள்ளது.

குறித்த போராட்டமானது எதிர்வரும் 28-08-2018 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்பாக நடைபெறவுள்ளது.

முல்லை மாவட்ட புத்திஜீவிகள் மற்றும் பொது அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இப் போராட்டத்திற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments