அலுக்கோசு பதவிக்கு 8பேர் போட்டி!


இலங்கையில் மீண்டும் மரணதண்டனையை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளநிலையில் வெற்றிடமாக காணப்படும் அலுக்கோசு பதவிக்கு தம்மை இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, 8 பேர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என, சிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அலுக்கோசு பதவி வெற்றிடத்துக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள நிலையிலேயே, இவர்கள் அதற்கு முன்னதாக தங்களது விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பித்துள்ள 8  பேரும் ஆண்கள் எனவும், இவர்களில் மூவர் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி கற்காதவர்கள எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களிற்கான தீர்ப்பை நிறைவேற்றுபவர்களது பதவியே அலுக்கோசுக்கள் ஆகும். 

No comments