ஆமிக்கு தேர் வடம் கொடுத்த அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர்


யாழ்.அச்சுவேலி - உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்றய தினம் இடம் பெற்ற தேர் திருவிழாவில் இராணுவம் தே ர் இழுத்தமை சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

கடந்த வருடமும் இதே ஆலயத்தில் தேர் தி ருவிழாவில் இராணுவம் தேர் இழுத்தமையினால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் இந்த வருடமும் அதுவே நடந்துள்ளது.

இந்த வருடமும் அச்சுவேலி இராணுவ முகாமில் இருந்த படையினர் திருவிழாவில் கலந்து கொண்டு மக்களுடன் இணைந்து தேர் இழுத்துள்ளார். இந்த விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.


No comments