சேலம் 8 வழிச்சாலை! லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

சேலம் சென்னை எட்டு வழிச்சாலையை அமைக்க மத்திய பாஜக அரசும், தமிழ்நாட்டு அதிமுக அரசும் முடிவு செய்துள்ளதை கண்டித்து லண்டனில் இந்திய தூதரகம் முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

லண்டன் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்(Periyar Ambedkar Study Circle) தோழர்கள் ஒருங்கிணைக்க, தமிழ் தோழமை(Tamil Solidarity) அமைப்பும், அய்க்கிய ராச்சிய தமிழ் மக்கள்(Tamil People in UK) அமைப்பும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டம், லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்னிலையில் நடைபெற்றது.




No comments