மட்டக்களப்பில் வாள் வீச்சு! காவல்துறையினர் இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு காந்தான்குடியில் காவல்துறையினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாக்கிழமை மாலை காத்தான்குடி 6ஆம் வட்டாரத்தில் காவல்துறையினரின் அவசர சேவைக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அவ்விடம் விரைந்த காவல்துறையினர் மீது வாள்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.

வாள்வீச்சில் படுகாயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாள்வீச்சுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments