கொள்ளையர்கள் காவல்துறையினர் துப்பாக்கி மோதல்! மூவர் படுகாயம்

மாத்தறையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் அறிவிதுள்ளனர்.
மாத்தறை நகர மத்தியில் அமைந்துள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் கொள்ளையிட வந்த கொள்ளையர்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றுள்ளது.
இதில் மூன்று காவல்துறையினர் படுகாயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர் என தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments