நாவற்குழி கொலையாளி:சரத்பொன்சேகாவின் பாதுகாப்பில்!


யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் 1996 ஆம் ஆண்டு 24 இளைஞர்கள் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை தற்போது யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதியாகிய நியமிக்கப்பட்டுள்ள அன்னலிங்கம் பிறேமசங்கர் வசம் செல்லவுள்ளது.

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் காலம் கடந்தவை என்பதால் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என இராணுவத்தினர் சார்பில் முன்னிலையாகிய சட்ட மா அதிபர் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

22 ஆண்டுகள் கடந்த இந்த சம்பவத்தை யாழ் நீதிமன்றில் விசாரிக்க முடியாது என்று இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவெலான சார்பில் மன்றில் முன்னிலையான சட்ட மா அதிபர் திணைக்கள பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர, ஆரம்ப விசாரணையிலே இந்த மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வழக்கில் இணைக்கப்பட்டுள்ள சான்று ஆவணம் ஒன்று போலியானது எனச் சுட்டிக்காட்டிய பிரதி மன்றாடியார் அதிபதி, 7 காரணங்களைக் குறிப்பிட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்ய விண்ணப்பம் செய்தார்.


ஆள்கொணர்வு மனுக்களின் பிரதிவாதிகள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைக்கு மனுதாரர்கள் பதில் ஆட்சேபனையை மன்றில் முன்வைக்க வரும் ஜூலை 11ஆம் திகதி தவணையிடப்பட்டு வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.


1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்களை பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.


தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகள் கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த நவம்பர் 9ஆம் திகதி 12 பேர் சார்பில் தனித்தனியே ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


அவற்றில் 3 மனுக்களை மட்டும் மேல் நீதிமன்று ஏற்றுக்கொண்டது.


9 பேரின் மனுக்கள் 2002ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் யாழ்ப்பானத்தில் நடத்த கூடாது என அப்போதைய யாழ்.மாவட்ட இராணுவ தளபதி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து , இந்த வழக்குகள் அக்கால பகுதியில் அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

வேறொரு மேல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கொன்றை இன்னொரு மேல் நீதிமன்றில் மீள திறக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய யாழ்.மேல் .நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், 9 பேரின் ஆள்கொணர்வு மனுக்களைத் தள்ளுபடி செய்திருந்தார்.

மனுக்களில் 1ம் பிரதிவாதியாக துமிந்த கெப்பிட்டிவெலான 2ம் பிரதிவாதியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ம் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதனிடையே 1996 ஆம் ஆண்டில் நாவற்குழி இராணுவ முகாமிற்கு கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பெடிவலானா இருந்தார்.இவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவால் பாதுகாக்கப்பட்டு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான ஆரம்பவிசாரணைகளை அப்போதைய சாவகச்சேரி நீதிவான் அன்னலிங்கம் பிறேமசங்கரே விசாரித்து துமிந்த கெப்பிட்டிவெலான தொடர்புகளை நிரூபித்திருந்தார். 

1996 ஆம் ஆண்டு சந்தாரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க  மிருகத்தனமான யுத்தத்தை முன்னெடுத்தபோது நாவற்குழி இராணுவ முகாமின் பொறுப்பாளராக இருந்தபோது ஆக்கிரமிப்பு சிங்கள சிப்பாய்கள் அந்த நேரத்தில் மிருகத்தனமான பாலியல் மற்றும் படுகொலைகளை செய்தனர். இவற்றில் ஒன்று செம்மணி படுகொலைகளாகும்.

1995 இல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதில் போரில் மிக முக்கியமான பங்கைக் கொண்டிருந்த அவர் தற்போது பிரிகேடியர் சரத் பொன்சேகாவின் நெருங்கிய நண்பர் ஆவார்.


2009 ல் வன்னியில் இனப்படுகொலை நடத்தியதிலும் பங்கெடுத்த அவர் அதன்பின்னர் பிரிகேடியராக பதவியுயர்வு பெற்றார்.


போருக்குப் பின்னர் அவர் இராணுவ பயிற்சிப்பள்ளியின் ஒரு கட்டளை அதிகாரியாக இருந்தார்.

சரத் பொன்சேகா மற்றும் அவரது உதவியாளர்களுக்கு எதிராக இராஜபக்ச ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் அவரது நிம்மதி நீடிக்கவில்லை.

பிரிகேடியர் கெப்டிவலாலானை கோத்தபாய ராஜபக்ச ஆரம்பத்தில் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதில் மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.

பின்னர், வெளிநாட்டுக்குச் சென்ற இராணுவ சேவையில் இருந்து விடுவிக்கப்பட்ட கெப்படிவாலனா 2015 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, நாடு திரும்பியிருந்தார்.

பிப்ரவரி 2015 இல் இராணுவ தலைமையகத்தில் பணிபுரியும் பணிப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார்.

பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி 66 பிரிவின் கட்டளை தளபதியான அவர் ஒரு வருடத்திற்குள், மேஜர் ஜெனரல் பதவிக்கு மே மாதம் 2017 இல் பதவி உயர்வு பெற்றார்.

யாழ்ப்பாணத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டபோது, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெற்குக்கு அவரை மாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments