ஊர்காவற்துறையில் இலங்கை காவல்துறை மீது வாள்வெட்டு!


யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்; நிலையத்தில் கடமையாற்றும் இலங்கை காவல்துறை உத்தியோகத்தரொருவர் வாள் வெட்டுக்குள்ளாகியுள்ளார். ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் சரமாரி வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்துள்ளார்.
ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த போது இன்றைய தினம் 5ம் திகதி சனிக்கிழமை காலை இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும், தாக்குதலை நடாத்தியவர் இனம் காணப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
படுகாயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலிற்கான காரணம் தனிப்பட்ட பகையா அல்லது வேறுஏதுமாவென்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை

No comments