ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி
தமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்கு தமிழர் தாயகப் பகுதியில் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
காலை 11 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வழங்க இறுதிப் போரில் தனது உறவை இழந்த சகோதரி ஒருவரால் ஈகைச் சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் ஆரம்பமானது.
உறவுகளை இழந்து தவிக்கும் பொது மக்கள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், கண்ணீர் விட்டு அழும் காட்சி அங்கிருப்பவர்களின் மனதை நெகிழ வைத்தது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்கு தமிழர் தாயகப் பகுதியில் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
Post a Comment