வடக்கு முதலமைச்சருடன் முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு


வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள்
சந்தித்தனர். இதன் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் தொடர்பாகவும், அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடினர் எனத் தெரிவிக்கப்பட்டது. சந்திப்பில் யாழ்- கிளிநொச்சி ஜம்மியத்துல் உலமா சபை கிளைத்தலைவர் உட்பட யாழ் .மாவட்ட முஸ்லிம் அமைப்புக்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள், மாநகர சபை உறுப்பினர் நிபாஹீர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது வடக்கு மாகாண முதலமைச்சரிடன் மனு ஒன்றையும் கையளித்தனர்.

No comments