முதலமைச்சர் கதிரை:கருமத்திற்கு காத்திருக்க சொல்கிறார் சாம்!

வடக்கு மாகாண சபை­யின் அடுத்த முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் யார் என்­பதை பொறுத்த நேரத்­தில் அறி­விப்­போம் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

திரு­கோ­ண­ம­லை­யில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.
வடக்கு மாகாண சபை­யின் ஆயுள் காலம் எதிர்­வ­ரும் ஒக்­ரோ­பர் மாதம் 25ஆம் திக தி­யு­டன் முடி­வ­டை­கின்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் போட்­டி­யிட்டு முத­ல­மைச்­ச­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்ட சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அடுத்த மாகாண சபைத் தேர்­த­லில் கூட்­ட­மைப்­பின் சார்­பில் போட்­டி­யிட மாட்­டார் என்­பதை அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தி­ருந்­தார்.
கூட்­ட­மைப்­பின் சார்­பில் அடுத்த முத­ல­மைச்­சர் யார் என்­பது தொடர்­பில், கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னி­டம் செய்­தி­யா­ளர்­க­ளால் கேள்வி எழுப்­பப்­பட்­டது.
“முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் தொடர்­பில் உத்­தி­யோ­க­பூர்வ முடிவு எத­னை­யும் இப்­போது எடுக்­க­வில்லை. எனி­னும் பொறுத்த நேரத்­தில், பொருத்­த­மான வேட்­பா­ள­ரையே நாம் கள­மி­றக்­கு­வோம்”- என்று இரா.சம்­பந்­தன் பதி­ல­ளித்­தார்.

No comments