நல்லாட்சி அரசாங்கம் தவறான பாதையில்


நல்லாட்சி அரசாங்கம் தற்போது தவறான பாதையில் பயணிப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏழை மக்களிடம் மறைமுகமாக பெறப்படும் வரி அவசியமில்லை என்றும், தங்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள 15 வீத வரி அவசியமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நல்லாட்சி அரசாங்கம் பின்னோக்கிச் செல்வதை தவிர்த்து, முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்

No comments