காணாமல் போனோர் பணியக ஆணையாளர்களுக்கு வெளிநாட்டு நிபுணர்கள் பயிற்சி!


காணா­மற்­போ­னோர் பணி­யக ஆணை­யா­ளர், உறுப்­பி­னர்­க­ளுக்கு வெளி­நாட்டு நிபு­ணர்­க­ளால் கொழும்­பில் பயிற்சிகள் வழங்­கப்­பட்டு வரு­கின்றன. முதல் கட்ட பயிற்­சி­கள் முடி­வ­டைந்­துள்ள நிலை­யில் இரண்­டாம் கட்­டப் பயிற்சி இந்த வாரம் நடை­பெ­ற­வுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது. காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்­கான ஆணை­யா­ளர் மற்­றும் உறுப்­பி­னர்­க­ளுக்கு கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­ம­னம் வழங்­கப்­பட்­டது. நீண்ட தாம­தத்­தின் பின்­னர் நிய­ம­னம் வழங்­கப்­பட்­டா­லும், பணி­ய­கத்­துக்­கான நிரந்­த­ரக் கட்­டி­டம் இன்­ன­மும் வழங்­கப்­ப­ட­வில்லை. கடந்த 2ஆம் திகதி தொடக்­கம் நாவ­லப்­பிட்­டி­ய­வி­லுள்ள தேசிய ஒரு­மைப்­பாடு மற்­றும் நல்­லி­ணக்க அமைச்­சின் கட்­டி­டத்­தில் தற்­கா­லி­க­மாக பணி­ய­கம் இயங்க ஆரம்­பித்­துள்­ளது. ஆணை­யா­ளர் மற்­றும் உறுப்­பி­னர்­கள் 7 பேருக்­கு­மான பயிற்­சி­கள் வெளி­நாட்டு நிபு­ணர்­க­ளால் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விட­யத்­தில் தேடு­தல், இது தொடர்­பான பணி­க­ளில் ஏற்­க­னவே ஈடு­பட்ட வெளி­நாட்டு சிறப்பு நிபு­ணர்­களே பயிற்­சி­களை வழங்கி வரு­கின்­ற­னர். நேபா­ளம், ஆஸ்­தி­ரே­லியா, சைபி­ரஸ் உள்­ளிட்ட நாடு­க­ளின் நிபு­ணர்­கள் இந்­தப் பயிற்­சி­களை வழங்­கி­யுள்­ள­னர். இந்த வார­மும் இரண்­டாம் கட்­டப் பயிற்­சி­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

No comments