நாடாளுமன்றம் கலைக்கப்படாது!


நாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லை என்று ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.“ 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 70 (3) பிரிவு, பாராளுமன்றத்தை முடக்கி விட்டு, கலைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. எனினும், அவ்வாறான நோக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடையாது. இதற்கு முன்னரும் பதவியில் இருந்த ஜனாதிபதிகளும் கூட பலமுறை பாராளுமன்றத்தை முடக்கியுள்ளனர்.அரசியலமைப்பின் 70 (1) பிரிவின் கீழ் பாராளுமன்றத்தை முடக்கியுள்ள ஜனாதிபதி, பாராளுமன்றக் கூட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் நாளையும் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments