வாக்களிக்கும் முறைமை குறித்து கலந்துரையாடல்


எதிர்வரும் மாகாண சபை தேர்தலில், வாக்களிக்கும் முறைமை குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள அனைத்து கட்சி மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
பெப்ரல் அமைப்பினால் குறித்த மாநாடு எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
பெப்ரல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரோஹன ஹெட்டியாராட்சி இதனை தெரிவித்துள்ளார்.
 
இந்த மாநாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

No comments