போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது


அம்பாறை – தமன பிரதேசத்தில் 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் 14 உடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு உந்துருளியில் பயணித்த இவர்களை பரிசோதனை செய்த வேளையே இந்த போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் தமன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது

No comments