வன்முறையை தூண்ட முற்பட்ட இலங்கையர் கைது


தமிழகம் - ராமநாதபுரம் பகுதியில் வன்முறையை தூண்ட முற்பட்டதாக தெரிவித்து, இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கைதாகியுள்ளனர்.

வட்சாப் சமுக வலைத்தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த குழு, கடவுளை இழிவுப்படுத்துவோரை கொலை செய்வோம் என்ற தொனிப்பொருளுடன் செயற்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

காவற்துறை விசேடப்பிரிவு ஒன்றின் சுற்றிவளைப்பின் போது குறித்த 3 பேரும் கைதானதாகவும், அவர்களுடன் இணைந்திருந்த மேலும் 4 பேர் தப்பி சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர், ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் என்று தெரியவந்துள்ளது

No comments