கேரதீவு சங்குப்பிட்டியில் 35 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!

கேரதீவு சங்குப்பிட்டிப் பாலத்தில் வைத்து ஒருதொகை கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.

பட்டா ரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 35 கிலோ கிராம் கஞ்சா பூநகரிப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடக்கு மூத்த பொலிஸ்மா அதிபர் றொசான் பெனாண்டோவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

No comments