தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை


இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்களை விடுவித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றைய தினம் அவர்கள் மன்னார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து. விடுவிக்கப்பட்ட மீனவர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை தமிழகத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments