கிளிநொச்சியில் ஆனந்தசங்கரியை சந்தித்த கடற்தொழில் அமைச்சர்
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியை இன்றைய தினம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, வீ. ஆனந்தசங்கரியின் உடல்நலம் குறித்து அமைச்சர் விசாரித்ததுடன், அவரது தற்போதைய நிலைமை தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
இச்சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய நிலைமை, வடக்கு மக்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இருவரும் சுமுகமான முறையில் கலந்துரையாடினர்.

Post a Comment