எல் நினோ வறட்சி காரணமாக பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படுகிறது!


எல் நினோ வானிலை தீவிரமடைவதால் ஏற்படும் மழைப்பொழிவு பற்றாக்குறையின் காரணமாக, அடுத்த மாதம் முதல் பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கால்வாய் நிர்வாகி 'ஃதெரிவித்தார்.

இரண்டு பெருங்கடல்களை இணைத்து, உலகளாவிய கடல்வழி வர்த்தகத்தில் சுமார் 5%-ஐக் கொண்டுசெல்லும் இந்த  முக்கிய நீர்வழியானது, கப்பல்கள் அதன் வழியே தொடர்ந்து செல்வதற்கு மழையைச் சார்ந்துள்ளது.

செப்டம்பர் 3 முதல், இந்த நீர்வழிப்பாதை வழியாக தற்போதுள்ள 36 கப்பல்களுக்குப் பதிலாக 34 கப்பல்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் என்று பனாமா கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 15 முதல், அதன் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் கப்பல்களின் எண்ணிக்கை 32 ஆகக் குறையும்.

பூமியின் அதிக மழை பெய்யும் நாடுகளில் ஒன்றாக பனாமா இருந்தபோதிலும், அது கடுமையான வறட்சியைச் சந்திப்பது, வெப்பமடைந்த பசிபிக் பெருங்கடலில் எல் நினோ உருவாகியுள்ளது என்பதற்கான அறிகுறியாகும். மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் பெய்த மழை, அந்த காலகட்டத்திற்கான வரலாற்று சராசரியை விட சுமார் 34% குறைவாக இருந்தது என்று கால்வாய் நிர்வாகி கூறினார்.

No comments