இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்தனர்!!
இன்று சனிக்கிழமை அதிகாலையில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் தணிப்பு முகமை தெரிவித்துள்ளது.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பலர் பல்வேறு அளவுகளில் காயமடைந்துள்ளதாக BNPB அமைப்பு தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் நிலநடுக்கத்தாலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட எண்ணற்ற பின் அதிர்வுகளாலும் சேதமடைந்துள்ளன.
சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 05:00 மணிக்குச் சற்று முன்னதாக (வெள்ளிக்கிழமை GMT 22:00) புளோரஸ் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 15 கி.மீ. ஆழத்தில் பதிவானதாக இந்தோனேசியாவின் வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment