ரஷ்யாவின் எச்சரிக்கை: உக்ரைனை இங்கிலாந்து 100% ஆதரிக்கிறது: ஆண்டி பர்ன்ஹாம்


ரஷ்யா மீதான சமீபத்திய உக்ரேனியத் தாக்குதல்களில் பிரிட்டிஷ் தயாரிப்பு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, விளைவுகள் ஏற்படும் என மாஸ்கோ எச்சரித்த நிலையில், பிரிட்டன் உக்ரேனுக்கு 100% தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் கூறியுள்ளார்.

நாங்கள் சந்தர்ப்பவாத நண்பர்கள் அல்ல, உக்ரைனுக்குத் தேவைப்படும் நேரத்தில் நாங்கள் உடன் இருப்போம், அந்த நிலை மாறாது என்று பர்ன்ஹாம் கூறினார்.

பிரிட்டனுக்கான ரஷ்ய தூதரகம் முன்னதாக, உக்ரைன் நெருக்கடியை வேண்டுமென்றே தீவிரப்படுத்த பிரிட்டன் முயல்கிறது என்று குற்றம் சாட்டியதுடன், இந்த மோதலில் அதன் ஈடுபாடு எந்த அளவுக்கு ஆழமாகிறதோ, அந்த அளவுக்கு அது அதிக விலையைக் கொடுக்கும் என்றும் கூறியது.

ரஷ்ய அச்சுறுத்தல் குறித்துக் கேட்கப்பட்டபோது, ​​பிரதமர், உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக இங்கிலாந்து ஆதரவளித்து வருகிறது. இந்த மோதல் தொடங்கியதிலிருந்து, முந்தைய பிரதமர்களின் நிலைப்பாடும் இதுவேயாகும் - தற்போதும் என் நிலைப்பாடே தொடர்கிறது என்று குறிப்பிட்டார்.

No comments