318 :தாண்டியது செம்மணி அவலம்!



செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் 318 மனித என்புத் தொகுதிகள் இன்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அகழ்வுப் பணிகள் 19 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்றும் நடைபெற்றிருந்தது.

அதனடிப்படையில் இன்று திங்கட்கிழமையுடன் 318 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றுள் 302 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளமிடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

றுகுணு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் பங்கேற்றிருந்தனர்.

தொடர்ச்சியாக சிறார்களது எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுவருகின்றமை புதைகுழியின் காலப்பகுதி தொடர்பில் சந்தேகத்தை வலுப்படுத்திவருகின்றது.


No comments