வளைகுடா தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்கிறேன் - டிரம்ப்


போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக நல்ல வாய்ப்பு இருப்பதாகக் காரணம் காட்டி, இன்று செவ்வாய்க்கிழமை ஈரான் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க இராணுவத் தாக்குதலை இரத்து செய்ததாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்தார் .

ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக, தாக்குதலைத் தாமதப்படுத்துமாறு கத்தார் , சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நட்பு நாடுகள் வாஷிங்டனை வலியுறுத்தியதாக டிரம்ப் கூறினார் .

பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால், முழுமையான, பெரிய அளவிலான தாக்குதலுக்கு தயாராக இருக்குமாறு அமெரிக்க இராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அவர்கள் ஒரு தீர்வை எட்டுவதற்கு மிக நல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறினார். அவர்கள் மீது கடுமையாகக் குண்டு வீசாமல் நம்மால் அதைச் செய்ய முடிந்தால், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

No comments