மாகாணசபை தேர்தல் நடக்குமா?
இவ்வாண்டின் இறுதிக்குளந மாகாணசபை தேர்தலை நடாத்தி முடிப்போமென அனுர அரசு அறிவித்து தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றது.
இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மே 21ம் திகதி விசேட நாடாளுமன்றக் குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாகாண சபைத் தேர்தலை எந்த தேர்தல் முறையின் கீழ் நடத்த வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவரான அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில்;குழு முன்னரும் பல தடவைகள் கூடியிருந்தது.
அதேவேளை, சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விசேட குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர். அதன்போது, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட ரீதியான தடைகள் குறித்து விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அக்குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.

Post a Comment