போருக்குப் பின்னர் ஈரானுடனான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப பல ஆண்டுகள் ஆகும் - ஐக்கிய அரபு அமீரகம்


போருக்குப் பின்னர் ஈரானுடனான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப பல ஆண்டுகள் ஆகும் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

போரின் போது ஈரான் பலமுறை ஐக்கிய அரபு அமீரகத்தைத் தாக்கியுள்ளதால், அபுதாபிக்கும் தெஹ்ரானுக்கும் இடையே நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பல யுகங்கள் ஆகும் என்று ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஆலோசகர் அன்வர் கர்காஷ் கூறியுள்ளார்.

2,800 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் தாக்கப்பட்ட பின்னர், என்னிடம் நம்பிக்கையைப் பற்றிப் பேச முடியாது. அதற்கு நீண்ட காலம் ஆகும் என்று, பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இழுபறியில் இருக்கும் நிலையில், பாரிஸ் அருகே உள்ள சாண்டிலி நகருக்கு அருகில் நடைபெற்ற உலகக் கொள்கை மாநாட்டில் கர்காஷ் கூறினார்.

No comments